in

சிவகாசியில், போதை தகராறில் வாலிபர் குத்தி கொலை காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுவன்


Watch – YouTube Click

சிவகாசியில், போதை தகராறில் வாலிபர் குத்தி கொலை காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுவன்

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம், மாரியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (32). இவரது மனைவி முனீஸ்வரி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செல்வராஜ், சிவகாசியில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வாட்டர் சர்வீஸ் நிறுவனம் அருகேயுள்ள பாலிபேக் அச்சகத்தில் வேலை பார்த்து வரும், சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கருத்தப்பாண்டி (17), செல்வராஜ் இருவரும், மது குடிக்கும் பழக்கத்தில் நண்பர்கள் ஆனார்கள்.

இந்த நிலையில் நள்ளிரவு செல்வராஜும், கருத்தப்பாண்டியும் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிள்ளைக்குழி முள்காட்டிற்குள் சென்று மது அருந்தியுள்ளனர்.
பின்னர் இவர்கள் இருவரும் செல்போனில் ஆபாசப்படம் பார்த்துள்ளனர். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டி அடிதடி தகராறு நடந்ததாக கூறப்படுகிறது.

கருத்தப்பாண்டியை, செல்வராஜ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கருத்தப்பாண்டி, செல்வராஜை திருப்பி தாக்கியுள்ளார். போதை மயக்கத்தில் இருந்த செல்வராஜ் தவறி கிழே விழுந்துள்ளார். அப்போது கருத்தப்பாண்டி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வராஜின் கழுத்தில் குத்தினார். இதில் படுகாயமடைந்த செல்வராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்த கருத்தப்பாண்டி, அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் இன்று அதிகாலை கருத்தப்பாண்டி, சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். கருத்தப்பாண்டி கொலை செய்து விட்டதாக கூறியதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், செல்வராஜின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

உடற்கூறாய்வு செய்வதற்காக, செல்வராஜின் உடல் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை தகராறில் வாலிபரை, சிறுவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சிவகாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திரிஷாவை கேவலபடுத்திய அதிமுக செயலாளர்….சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்…நடிகை ஆவேசம்

பழனி மலை படிக்கட்டுகளில் உடலை வில்லாக வளைத்து நடந்து சிறுவன் சாதனை