in

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பது உறுதி ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பேட்டி


Watch – YouTube Click

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பது உறுதி ஐஜேகே கட்சி தலைவர் பாரிவேந்தர் பேட்டி

 

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சுவாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்ததாகவும், ஆளும் திமுக தொண்டர்கள் கூட வருத்தத்தில் உள்ளனர் என்றும் அதன் காரணமாக பிஜேபியின் தோழமைக் கட்சிகள் உறுதியாக வெற்றி பெறும் என தெரிவித்த பாரிவேந்தர்.

மத்தியில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார் என்பது உறுதியான ஒன்று எனவும், அவருக்கு மாற்று யாரும் இல்லை என்றும் உலகத் தலைவர்கள் மதிக்கக் கூடிய சிறந்த தலைவராக மோடி உள்ளார் என தெரிவித்த அவர், மோடி பிரதமராக தொடர்ந்தால் உலக பொருளாதாரத்தில் முதலிடத்தை இந்தியா பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.

தற்போதைய தேர்தலில் போட்டி என்பது திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் எனவும், நாட்டின் வளர்ச்சியை மனதில் கொண்டு தமிழ்நாடு மக்கள் மோடிக்கும் பாஜகவுக்கும் தான் வாக்களிப்பார்கள் என்றும் மக்களின் தேவைகளையும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொடுப்பதால் எனது வெற்றி உறுதியானது என தெரிவித்த அவர் எதிரில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்கு தேவையில்லை என்றும் இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலில் பணம் கொடுத்தால் அது மக்களின் வரிப்பணம், ஊழல் செய்த பணம். எனத் தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

நடுவானில் விமானக் கழிவறையில் இளைஞர் விபரீத முடிவு