in

எனக்கு நானே ஓட்டு போட மாட்டேன்; மக்களிடம் எதுக்கு ஓட்டு கேட்கனும்


Watch – YouTube Click

எனக்கு நானே ஓட்டு போட மாட்டேன்; மக்களிடம் எதுக்கு ஓட்டு கேட்கனும்; தொகுதி மக்களுக்கு எந்த வாக்குறுதியும் தரமாட்டேன்; அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஆடிட் கணக்கை மக்களிடம் காண்பிப்பார்களா; செய்தியாளர்கள் கேள்விக்கு கிறுகிறுக்க வைத்த சுயேட்சை வேட்பாளர்; ஒற்றை ஆளா வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பைக்கில் புறப்பட்டார்

நாகை நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று திருமருகல் ஒன்றியம் கீழபூதனூரைச் சேர்ந்த பிரேம் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளரோடு கூட 4 பேர்வரை அனுமதி என்றாலும் கூட யாரும் வராத்தால் ஒற்றை ஆளாக வந்து வேட்புமனுதாக்கல் செய்துவிட்டு பைக்கில் புறப்பட்டார்.

வேட்பாளரா தொகுதி மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்க தொகுதி மக்களுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்க மாட்டேன் என்றும் எனக்கு நானே ஒட்டு போட மாட்டேன் மக்களிடம் எதுக்கு ஓட்டு கேட்கனும் என்று அதிர்ச்சீயாக கேள்வி எழுப்பியவர் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஆடிட் கணக்கை பொது மக்களிடம் காண்பிப்பார்களா என்றவர் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு என்ன செய்வீர்கள் என கேட்க நான் என்ன பணக்காரனா தொகுதி மக்களுக்கு செய்ய என அதிரடி காட்டினார்.

இவர் உள்ளாட்சி தேர்தலில் ஊராரட்சி மன்றத் தலைவருக்காக 3 முறையும், சட்டமன்ற தேர்தலில் 2 முறையும், நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Watch – YouTube Click

What do you think?

சிவகாசி அருகே பயங்கரம் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் கைது

சாத்தூர் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் | Seizure of money