in

என் குறையை மறைத்து நான் கல்யாணம் பண்ண விரும்பவில்லை .. விஜயகுமார் பேத்தி தியா

என் குறையை மறைத்து நான் கல்யாணம் பண்ண விரும்பவில்லை .. விஜயகுமார் பேத்தி தியா

சமீபத்தில் நடைபெற்ற விஜயகுமாரின் பேத்தி திருமணம் நடைபெற்ற நிலையில் அது சம்பந்தமான செய்திகளும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் விஜயகுமாரின் பேத்தியான தியாவிற்கு மேக்கப் போட்ட பியூட்டிஷியன் சமீபத்தில் அளித்த பேட்டி அதிர்ச்சியை அளிக்கிறது, தியா அழகாக இருந்தாலும் அவருடைய கன்னத்தில் ஒரு வடு இருக்கிறது. மேக்கப் செய்து அதை மறைக்க வேண்டாம் என்று என்னிடம் சொல்லிவிட்டார்.

தியா எண்ணிடம் பேசும் போது இவர் ஒரு பிரபலத்தின் வாரிசு என்று எனக்கு தெரியாது ஆனால் நான் அங்கே போன போதுதான் விஜயகுமார் சார் இன் குடும்பம், மற்றும் நண்பர்கள் எல்லோரும் என்னிடம் பாசமாக பேசினார்கள், நான் தியாவின் அம்மா அனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தி ஆகியோருக்கும் மேக்கப் செய்த போது அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.

அதோடு நான் வியந்து பார்த்த ஒரே நபர் தியா தான் அதற்கு காரணம் அவர் ஒரு மருத்துவராக இருக்கிறார் தான் ஒரு பிரபலத்தின் வாரிசு என்ற பந்தா கொஞ்சம் கூட அவரிடம் இல்லை சாதாரண பெண் போல் தான் என்னிடம் பழகினார்.

அதுபோல தியாவின் முகத்தில் நான் பெரிய அளவில் எந்த மேக்கப்பும் போடவில்லை அவர் இயற்கையாக இருப்பது தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லிவிட்டார்.

அவருடைய கண்களுக்கு மட்டும் தான் நான் மேக்கப் போட்டேன் அவர் கண்களுக்கு பக்கத்தில் பெரிய மச்சம் இருக்கிறது. அதை நான் மறைக்கவா என்று கேட்டதற்கு தியா மறுத்துவிட்டார். அதற்கு காரணம் அந்த மச்சம் நான் பிறந்தது முதல் என்னுடன் இருக்கிறது பல வருடங்களாக என்னுடன் இருக்கும் அதை நான் மறைக்க விரும்பவில்லை நான் நானாக இருக்க விரும்புகின்றேன் என்று கூறினார்.

இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது எல்லோரும் நம்முடைய குறைகளை நம்முடைய பலமாக நினைத்துக் கொண்டால் எதற்கும் பயப்படவும் அவமானப்படவும் தேவையில்லை என்று தோன்றியது.

ஏனென்றால் தியாவின் முகத்தில் இருக்கும் அந்த மச்சம் மட்டும்தான் குறை அதையே எனக்கு பெருமை என்று கூறும் தியாவை பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கிறது என்று அவருடைய பியூட்டிஷியன் கூறியிருக்கிறார்.

What do you think?

மலர் சீரியல் ரீல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது..

இந்த படம் நிச்சயம் உலக அளவில் கொண்டாடப்படும்…படக்குழுவின் நம்பிக்கையை காபாற்றுவார்களா ரசிகர்கள்