in

மலர் சீரியல் ரீல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது..

மலர் சீரியல் ரீல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது..

ஒரு ரீல் ஜோடி ரியல் ஜோடி ஆனார்கள். தற்பொழுது எல்லாம் வெள்ளித்திரை மற்றும் சின்னி திரையில் தங்களுடன் நடித்தவர்களையே திருமணம் செய்து கொள்வது டிரெண்ட் ஆகிறது.

சேத்தன் பிரியதர்ஷினி ஜோடிகள் தொடங்கி சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நீ நான் காதல் என்ற தொடரில் நடித்த ஜேக்கப் மற்றும் சுவாதிகா வரை தங்களுடன் நடித்த நடிகர் நடிகைகளையே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

தற்பொழுது ஒரு சின்னத்திரை நடிகர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது. வாணி ராணி, கல்யாண பரிசு, சுந்தரி போன்ற சீரியலில் நடித்து பிரபலமான நிவேதா தற்பொழுது திருமகள் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் ஏற்கனவே தன்னுடன் நடித்த ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

நிவேதா தற்பொழுது மலர் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருடன் சுரேந்தர் என்ற நடிகரும் இணைந்து நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இவர்கள் இருவருக்கும் காதலித்த நிலையில் தன்னுடைய ப்ரீ வெட்டிங் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட பலர் இவர்களை விமர்சித்தார்கள், கடுப்பாகி பதில் அளித்த நிவேதா ஆமாம் நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் எனக்கு விவாகரத்தாகி மூன்று வருடம் ஆகிவிட்டது.

இப்பொழுது எனக்கு ஒரு புது காதல் கிடைத்திருக்கிறது ஸ்பெஷலான ஒருவருடம் நான் வாழ போகிறேன் எங்களை வாழ விடுங்கள் எங்கள் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் தேவையற்ற கேள்விகளை கேட்க வேண்டாம் என்று சூடாக பதிலளித்தார்.

இந்நிலையில் நேற்று நிவேதா மற்றும் சுரேந்தர் திருமணம் நடைபெற்றது. இரு வீட்டாரின் குடும்பத்தினரும் சீரியல் பிரபலங்களும் புடை சூழ இவர்கள் திருமணம் நடந்தது. இவர்களுடைய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

காங்கிரஸ் – சமாஜ்வாதி தொகுதி பங்கீடு

என் குறையை மறைத்து நான் கல்யாணம் பண்ண விரும்பவில்லை .. விஜயகுமார் பேத்தி தியா