in

தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் மாபெரும் மறியல்


Watch – YouTube Click

தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் மாபெரும் மறியல் 

 

ஜாக்டோ ஜியோ சார்பில் தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் மாபெரும் மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு இதனால் பெரும் பரபரப்பு

காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கும் உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதை உடனடியாக வழங்கிட வேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக வழங்கிட வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்திட வேண்டும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1000க்கும் மேற்ப்பட்டோர் தஞ்சை ஆற்றுப்பாலம் பகுதியில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

போலீசாருக்கும் ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து போலீசாரை மீறி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனை அடுத்து மறியலில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

இக்கட்சியை யாராலும் வெல்ல முடியாது ஓ பன்னீர்செல்வம் பேட்டி

தமிழக காவிரி கரையில் ஒலித்த ஆராதனை