in

நெல்லையில் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேட்டி


Watch -YouTube Click

நெல்லையில் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் பேட்டி

 

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் தேர்தலுக்காக கட்டுப்பாட்டு அறை செயல்பாட்டுக்கு வந்தது.

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இலவச தொலைபேசி எண்கள் மற்றும் பொதுமக்களின் புகார்களை தெரிவிக்க தனித்தனியாக கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தேர்தல் கட்டுப்பாட்டறையை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி உட்பட 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.

ஆறு தொகுதிகளிலும் மொத்தமாக 8 லட்சத்தி 6 ஆயிரத்து 96 நபர்களும் ஆண் வாக்காளர்களும் 8 லட்சத்து 44 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும் 152 இதர பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 50 ஆயிரத்து 532 வாக்காளர்கள் உள்ளனர்.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் 1810 வாக்குச்சாவடிகள் உள்ளது இதில் 333 பதட்டமான வாக்குச்சாவடிகளும் 13 பதட்டமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று பறக்கும் படை மூன்று நிற்கும் படை ஆகியவை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

85 வயதுக்கு மேற்பட்ட தபால் வாக்குகள் பெரும் வாக்காளர்களாக 23,100 பேர் கண்டறியப்பட்டுள்ளது. நூறு வயதுக்கு மேற்பட்டோர் என 795 பேர் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

பொன்னமராவிலிருந்து வந்த காட்டெருமையை மயக்க ஊசி போட்டுபிடித்த அதிகாரிகள்

கொடைக்கானல், ஊட்டி இருப்பதைப் போல் சிவகாசி கண்மாயில், படகு சவாரி