in

இலங்கை அகதி முகாமில் வாலிபர்! கைது


Watch – YouTube Click

வத்தலகுண்டு அருகே இலங்கை அகதி முகாமில் கழுத்தை நெரித்து படுகொலை. திண்டுக்கல் வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் அகதி ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வத்தலகுண்டு அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (40) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (30) என்பவருடன் வேலைக்கு வந்த இடத்தில் இலங்கை அகதி ஆனந்த குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

வேலை முடிந்து இருவரும் முகாமில் உள்ள ஆனந்தகுமார் வீட்டில் மது அருந்தி ஜாலியாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு தூங்கப்போன ஆனந்தகுமார் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை அருகில் இருந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஆனந்தகுமார் சடலமாக கிடந்துள்ளார்‌ இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு காவல்துறையினர் ஆனந்தகுமார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நேற்று இரவு ஆனந்த குமாரும் அவரது நண்பர் நாகராஜ் மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர் அப்போது அவர்களுடைய ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய அளவிலான சண்டையாக மாறியுள்ளது. இதனால் குடி போதையில் இருந்த நாகராஜ் அருகில் இருந்த துண்டை எடுத்து ஆனந்த குமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிய ஓடியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்த காவல்துறையினர் திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து நாகராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர்

மது போதையில் இலங்கை அகதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

டெல்லி- குஜராத் இன்று பலப்பரீட்சை

வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ‘செல்ஃபி பாயின்ட்’