in

பூஜை அறைக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு


Watch – YouTube Click

பூஜை அறைக்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டம் கே கே நகரில் வசித்து வருபவர் ரங்கராஜ். இவர் அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவருக்கு சுமதி என்கிற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சுமதி மற்றும் அவரது குழந்தைகள் வீட்டில் தனியாக இருந்த போது ஐந்தடி நீளம் உள்ள சாரைப் பாம்பு ஒன்று வந்துள்ளது.

அப்போது சுமதி மற்றும் அவரது குழந்தைகள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடியதுடன் பின்பு ரங்கராஜ்க்கு தகவல் தெரிவித்து அவர் வந்து பார்த்த போது பாம்பு மாயமானது.

இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் பூஜை அறைக்கு அதே சாரைப் பாம்பு வந்துள்ளது. இதனையடுத்து ரங்கராஜ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள பாம்பு பிடி வீரர் பாண்டியன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் பாண்டியன் 2 நிமிடத்தில் ஐந்து அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்து கோணிப்பையில் போட்டு பாதுகாப்பாக எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டு உள்ளார்.

பாம்பு பிடி வீரரான ரங்கராஜ் பாம்பு பிடிப்பதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

சாலையின் நடுவே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு

அமராவதி ஆற்றில் போர் லைன் போட்டு தண்ணீர் திருட்டு