in

பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மை தான்.. நடிகை கிரண் ஆதங்கம்

பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மை தான்.. நடிகை கிரண் ஆதங்கம்

ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை கிரண். அதனைத் தொடர்ந்து அன்பே சிவம், தென்னவன், அரசு, வின்னர், நியூ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கசப்பான தனது சினிமா அனுபவங்களை பற்றி ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது எனக்கு மூன்று திருமணங்கள் ஆகிவிட்டது என்றும் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்றும் பேசுகிறார்கள்.

தமிழ் சினிமாவிற்கு வந்த பிறகு ஒரு படத்திலேயே நான் முன்னணி நடிகையின் அந்தஸ்துக்கு வந்து விட்டேன். அதன் பிறகு காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று நினைத்தேன். அதனால் அஜித் போன்ற பெரிய ஸ்டார்களின் படத்தில் நடிப்பதை கூட அவருக்காக நான் தவிர்த்தேன்.

ஆனால் அந்த காதல் கைகூடாமல் போனது பட வாய்ப்புகளும் குறைந்து விட்டது. எனக்கு படங்களில் வாய்ப்பு தருவதாக கூறி என்னுடன் நெருங்கி பழகிய நண்பர்களே எனக்கு தொலைபேசியில் தவறாக பேசி அழைப்பு விடுத்தனர்.

அப்போது தான் நான் புரிந்து கொண்டேன் சினிமாவில் யாரும் நண்பர்கள் இல்லை என்று நல்லவர்கள் ஆக நான் நினைத்து பழகி அத்தனை பேரும் கெட்டவர்கள் அதனால் வெறுத்து போய்விட்டேன்.

எத்தனையோ நடிகைகள் பிகினி உடை அணியும் போது என்னை மற்றும் கவர்ச்சி நடிகை ஆக முத்திரை குத்தி பார்க்க தொடங்கியது ஏன்? பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மைதான் அதனால் அதைப் பற்றி நான் இப்பொழுது பேச விரும்பவில்லை என்று கிரண் கூறினார்.

What do you think?

வீடு தேடி வந்த விஜய்யை பார்க்காமல் திருப்பி அனுப்பிய சீரியல் நடிகர் சஞ்சீவ்

மாதம் ஆயிரம் ரூபாய் என்பது ஒரு ஏமாற்று…திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேச்சு