அரசு கட்டிடத்தில் மின்சார திருட்டு நடவடிக்கை எடுக்குமா அரசு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இது வழூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு ஒரு செவிலியர் தங்கி பணியாற்றி வருகிறார். இந்த கட்டிடம் பழுதாகி
உள்ளதாகவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லையென்றும் சுதந்திர தினத்தன்று சென்னாவரத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடத்தின் மின்சார இணைப்பு ஊராட்சி மன்ற கோரிக்கையின் அடிப்படையில் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேரடியாக, முறையின்றி, மின் கம்பியில் இருந்து மின்சாரம் பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது தெரியவந்தது.

திருவிழா காலங்களில் இது போன்ற இணைப்புகள் மூலமாக மின் திருட்டு நடக்கும்போது நடவடிக்கை எடுக்கும் மின்வாரியம் பாராமுகமாக இருந்தது ஏன்?
இதை கண்காணித்து புதிய இணைப்பை பெற்றுத்தர வேண்டிய வட்டார மருத்துவ அலுவலர் என்ன செய்து கொண்டிருந்தார் என பொதுமக்கள் கேட்கின்றனர்.


