in

மெட்டி ஒலி இரண்டாம் பாகத்தின் இயக்குனர் மாற்றம்

மெட்டி ஒலி இரண்டாம் பாகத்தின் இயக்குனர் மாற்றம்

சன் டிவியின் பிரபலமான மெகா ஹிட் சீரியல் ஆன ‘மெட்டிஒலி’ இல்லத்தரசிகளின் ஃபேவரிட் சீரியல்.

இந்த சீரியல் முடிந்து 18 ஆண்டுகள் ஆன பிறகும் மீண்டும் மறு ஒளிபரப்பு ஆனபோதும் ரசிகர்கள் அதனை, விரும்பி பார்த்தார்கள்.

மெட்டி ஒலி சீரியலின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி ஓர் ஆண்டு கடந்த பின் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது மெட்டி ஒலியின் இரண்டாம் பாகத்தை திருமுருகன் இயக்க வில்லையாம் அவருக்கு பதிலாக இயக்குனர் விக்ரமாதித்தன் தான் இயக்குகிறாராம் என்ற தகவலை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மெட்டி ஒலி சீரியலில் நடித்த சகோதரிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்ட ரீயூனியன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

விரைவில் இதற்கான அறிவிப்பை சன் டிவி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ .. கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

பஞ்சுமிட்டாய்யில் கேன்சரை உருவாக்கக்கூடிய ரசாயனம்