in

பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ .. கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

பூனம் பாண்டே வெளியிட்ட வீடியோ .. கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு

கர்ப்பப்பை புற்றுநோயால் இறந்து விட்டதாக தவறான வீடியோவை வெளியிட்டு பொது மக்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் குழப்பத்தையும் ஏற்படுத்திய பூனம் பாண்டேவின் இந்த செயலை கண்டித்து வலைத்தளத்தில் பலர் கண்டித்தாலும், மராட்டிய சட்டமன்ற உறுப்பினருமான சத்யஜித் ராய் பூனம் பாண்டே மீது போலீசில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் என்பது அறிந்ததே.

பூனம் பாண்டேவின் இந்த குசும்புக்கு தொழில்நுட்ப பிரிவு 67 இன் கீழ் 5 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கொல்கத்தாவை சேர்ந்த அமித் ராய் என்பவர் தனது வக்கீலான ஷயான் சச்சின் பாசு என்பவர் மூலம் பூனம் பாண்டேவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .

பொதுமக்களுக்கு தேவையற்ற மன உளைச்சலை கொடுத்ததற்காக அவர் மீது நோட்டீஸ் விட்டதாகவும் விரைவில் கோர்ட்டில் வழக்கு தொடர போவதாகவும் கூறியுள்ளார்.

What do you think?

செஞ்சி அருகே மளிகை கடையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்ததால் பரபரப்பு

மெட்டி ஒலி இரண்டாம் பாகத்தின் இயக்குனர் மாற்றம்