in

கரூரில் அதிமுக சார்பில் சுவர் விளம்பர பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்


Watch – YouTube Click

கரூரில் அதிமுக சார்பில் சுவர் விளம்பர பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுவர் விளம்பரம் எழுதும் பணியானது நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கரூர் மாவட்டம் முழுவதும் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள், இரட்டை இலை சின்னம் மற்றும் கழகக் கொடி உள்ளடக்கிய சுவர் விளம்பரம் எழுதும் பணி ஆனது நடைபெற உள்ள நிலையில்

அதற்கான முதல் கட்ட பணிகளை இன்று ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் பகுதிகளில் அதிமுக சார்பில் சுவர் விளம்பரம் எழுதும் பணியினை முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் விளம்பரம் எழுதும் பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சென்னையில் மின்சார ரயில் ரத்து

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து செஞ்சி நான்கு முனை சாலையில் பிஜேபி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.