in ,

சென்னையில் மின்சார ரயில் ரத்து


Watch – YouTube Click

சென்னையில்  மின்சார ரயில் ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே  44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் முக்கியமான போக்குவரத்து சாதனங்களில் மின்சார ரயில்களின் பங்கு என்பது அளப்பறியது. குறைவான கட்டணத்தில் சிரமமின்றி எளிதாக பயணம் செய்யும் வகையில் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை குறைந்த கால இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

தாம்பரம் – சென்னை கடற்கரை, செங்கல்பட்டு – சென்னை கடற்கரை, திருமால்பூர் – சென்னை கடற்கரை, திருவள்ளூர், ஆவடி, வேளச்சேரி என பல வழித்தடங்களிலும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சாதாரண கட்டணம், எக்ஸ்பிரஸ் என இருவகையில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாகளே வார இறுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.  காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

அதே நேரத்தில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 11.55, நண்பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55 பகல் 2.40, பகல் 2.55 மணிக்கு தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மும்பையில் கைது

கரூரில் அதிமுக சார்பில் சுவர் விளம்பர பணிகளை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்