in

இணையவாசிகள் மேல் கோபம் கோப்பளிக்க கேள்வி கேட்ட ராஷ்மிக்கா.. அப்போ தயாரிப்பாளர்கள் தலையில் துண்டா

இணையவாசிகள் மேல் கோபம் கோப்பளிக்க கேள்வி கேட்ட ராஷ்மிக்கா.. அப்போ தயாரிப்பாளர்கள் தலையில் துண்டா

கடந்த ஒரு வாரமாக ராஷ்மிக்கா மந்தனா, நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்ற கிசுகிசுக்கள் அடிபடுகிறது.

தமிழில் இவர் நடித்த சுல்தான், வாரிசு போன்ற படங்களும் இந்தியில் தற்பொழுது இவர் நடிப்பில் வெளியாகி பெரும் சர்ச்சையான அனிமல் படமும் வெற்றி பெற்றது.

இவரின் தொடர் வெற்றியால் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. ஏற்கனவே ஒரு படத்திற்கு மூன்று முதல் நான்கு கோடி வரை சம்பளம் வாங்கியவர் தற்பொழுது 4.5 கோடி சம்பளமாக கம்மிட்டான படத்திற்கும் கேட்கிறார் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதனால் கோபமான ராஷ்மிகா மந்தனா அளித்துள்ள பேட்டியில் நான் சம்பளத்தை உயர்த்தி விட்டேன் என்று உங்களுக்கு யார் சொன்னது இந்த தகவல் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

இதை பார்த்த பிறகு தான் உண்மையாகவே என் சம்பளத்தை ஏன் உயர்த்த கூடாது என்று நினைக்கிறேன். உங்கள் அட்வைசுக்கு நன்றி ரசிகர்களே.

தயாரிப்பாளர்கள் எதற்காக இவ்வளவு சம்பளத்தை உயர்த்தினீர்கள் என்று கேட்டால் இணையதளத்தில் அப்படித்தானே தகவல் பரவி இருக்கிறது அதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன் அதனால் உயர்த்தினேன் என்று பதில் அளிக்கலாமா என்று நினைக்கிறேன் என்று கான்டாக கேள்வி கேட்டார் ராஷ்மிக்கா மந்தனா.

What do you think?

ஹேமமாலினி மகள் இஷா தியோல் திருமண பந்தம் முறிந்தது… காரணம் தெரியாமல் திணறும் பாலிவுட் பிரபலங்கள்

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை