in

அதிமுக நிர்வாகிகளுக்குள்ளே குழப்பம் இரு பிரிவுகளாக போராட்டம் ஈடுபட்ட அதிமுகவினர்


Watch – YouTube Click

மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக நிர்வாகிகளுக்குள்ளே குழப்பம் இரு பிரிவுகளாக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

தமிழகத்தில் போதை பொருள் நடமாடத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடத்த தலைமை கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.இதில் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக சாத்தூர் நகர கழகம் சார்பில் நகர செயலாளர் எம்.எஸ்.கே. இளங்கோவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ள இடத்தில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்ததால் நகர கழகம் சார்பில் சாத்தூர் பேருந்து நிலையம் அருகேயும். கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் அதிமுக கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர். கே.ரவிச்சந்திரன் புகைப்படம் வைத்து முக்குராந்தல் பகுதியில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.எஸ்.சண்முக தலைமையிலும் என இரு பிரிவுகளாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரால் சாத்தூர் பகுதியில் பொதுமக்கள் மத்தியிலும் போராட்டக்காரர்கள் மத்தியிலும் அதிமுகவினரை நகரத்திலா,ஒன்றியத்திலா என்ற குழப்பத்தில் நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி அணியா,ஓபிஎஸ் அணியா என இரு பிரிவுகளாக உள்ள நிலையில் நகர கழகமா ஒன்றிய கழகமா என சாத்தூரிலும் அதிமுகவினர் பிரிவுகளாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா நிகழ்ச்சி விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு

சிஏஏ விவகாரம் எடப்பாடி பழனிசாமி பல்டி