in

குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது


Watch – YouTube Click

குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது

 

தென்காசியில் நேற்று திடீரென பெய்த மழை காரணமாக வறண்டு பாறைகளாக காட்சியளித்திருந்த குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது தற்போது மழை நீடித்து வருவதால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு.

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளமேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகள் முற்றிலும் நீரின்றி வறண்டு காட்சியளித்தது.

நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரமாக பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனால் சுற்றுலா பணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக குற்றால அருவிகள் முற்றிலும் வறண்டு பாறைகளாக காட்சியளித்த நிலையில் திடீரென்று நீர்வரத்து அதிகரித்தது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணியினை மாவட்ட தேர்தல் மேற்பார்வையாளர் நேரில் ஆய்வு….

குத்தாலம் சுற்று வட்டார பகுதியில் பெய்த திடீர் மழை