in

குத்தாலம் சுற்று வட்டார பகுதியில் பெய்த திடீர் மழை


Watch – YouTube Click

குத்தாலம் சுற்று வட்டார பகுதியில் பெய்த திடீர் மழை

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சுற்று வட்டார பகுதியில் பெய்த திடீர் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெப்பம் கடுமையாக வாட்டி வருகிறது.

டிசம்பர் மாதத்திற்கு பிறகு கடந்த நான்கு மாதங்களாக மழை பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்த நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் பெரும்பாலான குளங்கள் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன.

இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் அவதி உற்று வந்தனர் இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் 20 நிமிடம் மழை பெய்தது இதனால் அங்கு வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.


Watch – YouTube Click

What do you think?

குற்றால அருவிகளில் மீண்டும் தண்ணீர் வரத்து தொடங்கியது

இன்று ஒரே மேடையில் ராகுல், ஸ்டாலின் பிரசாரம்