in

விசைத்தறி தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற இளைஞர்


Watch – YouTube Click

விசைத்தறி தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற இளைஞர்

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சத்திரப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுக கடவுள். விசைத்தறி தொழிலாளியான இவரது மனைவி பேச்சியம்மாள் மருத்துவ துணி உற்பத்தி ஆலையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகன்கள் இருவரும் மதியம் உணவருந்தி விட்டு பள்ளிக்கு சென்று விட பேச்சியம்மாள் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். காலை வேலை முடிந்து 4 மணி அளவில் ஆறுமுக கடவுள் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் சாவி வழக்கமாக வைக்கும் இடத்தில் காணவில்லை.

சாவியை தேடிக்கொண்டிருந்த போது, கதவு திறந்திருந்ததும் வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. திறந்து பார்த்த போது இளைஞர் ஒருவர் வீட்டின் அலமாரி, பீரோவை திறந்து போட்டு திருட முயன்று கொண்டிருப்பது தெரிந்தது.

அந்த இளைஞரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்த தொழிலாளி, அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பிடிப்பட்ட இளைஞர் அருகே உள்ள அய்யனாபுரத்தை சேர்ந்த கருப்பசாமி என்பதும், மது அருந்த பணமின்றி சுற்றிய போது, வீட்டின் சாவி இருப்பதை கண்டு உள்ளே நுழைந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து கீழராஜகுலராமன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

வரும் 24ம் தேதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகம்: மாஜி அமைச்சர் முனுசாமி பேட்டி

போதையில் தள்ளாடி இயக்குனரிடம் வாங்கிகட்டி கொண்ட மாதவன்…