in

போதையில் தள்ளாடி இயக்குனரிடம் வாங்கிகட்டி கொண்ட மாதவன்…

போதையில் தள்ளாடி இயக்குனரிடம் வாங்கிகட்டி கொண்ட மாதவன்…

போதையில் இருப்பது போன்ற ஒரு காட்சி தத்ருபமாக இருக்க வேண்டும் என்று சரக்கு அடித்து வாங்கி கட்டிக் கொண்டு நடிகர் மாதவன்.

ஹிந்தியில் அறிமுகமான மாதவன் பிறகு தமிழில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்றார். இவர் தற்பொழுது நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.

நடிகர் மாதவன் 2009 ஆம் ஆண்டு ராஜ்குமார் இராணி நடிப்பில் ‘3 இடியட்ஸ்’ என்ற படத்தில் அமீர்கான் உடன் நடித்தார். இவர்களுடன் கரீனா கபூர், ஷர்மன்ஜோஷி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வசூலில் பட்டைய கிளப்பிய இப்படத்தை தமிழில் இயக்குனர் சங்கர் ‘நண்பன்’ என்ற பெயரில் எடுத்த போது தமிழிலும் இப்படம் செம போடு போட்டது.

இந்நிலையில் 3 இடியட்ஸ் என்ற படத்தில் தான் நடித்த பொழுது தன்னால் படக் குழுவினருக்கு ஏற்பட்ட சங்கடத்தை நகைச்சுவையாக அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் மாதவன் கூறியுள்ளார்.

அதாவது அந்த படத்தில் மூன்று நண்பர்களும் குடிபோதையில் இருப்பது போல் ஒரு காட்சி இருக்கும் அந்த காட்சி ரியலாக இருக்க வேண்டும் என்றால் நாம் தண்ணி அடிக்க வேண்டும் என்று அமீர்கான் மாதவனுக்கு ஐடியா கொடுத்திருக்கின்றார்.

9 மணிக்கு ஷூட்டிங் நடைபெறும் என்று கூறியதை அடுத்து எட்டு மணிக்கு எல்லாம் நாங்கள் மூவரும் குடிக்க ஆரம்பித்து விட்டோம், சுமார் 8:30 மணி இருக்கும் போது நான்காவது பெக்கை அடித்து விட்டோம். ஆனால் திடீரென்று சூட்டிங் தாமதமாகி இரண்டு மணி நேரம் கழித்து தான் எடுத்தார்கள் டயலாக் பேப்பரை கொடுக்கும் பொழுது டயலாக் பேச முடியாமல் தடுமாறி விழுந்தோம்.

3 இடியட்ஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இடியட் ஆக இருந்து டைரக்டரிடம் நல்லாம் வாங்கி கட்டிக் கொண்டோம்.

What do you think?

விசைத்தறி தொழிலாளி வீட்டுக்குள் புகுந்து திருட முயன்ற இளைஞர்

தேர்தலில் காவல்துறையினர் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ஆட்சியர் உத்தரவு