in

லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்டார்


Watch – YouTube Click

லாரியின் பின்புறம் இருசக்கர வாகனம் மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்டார்

 

திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடி அடுத்த அதங்குடி புதுத்தெரு பகுதியை சேர்ந்த ராஜா மகன் பிருத்திவிராஜ் (20). கேட்டரிங் படிப்பு முடித்த இவர் தனியார் லேப் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் நாகை மாவட்டம் காருகுடி பகுதியில் தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக நேற்று இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அங்கிருந்து காருக்குடி பகுதியை சேர்த்த தமிழரசன் என்பவருடன்
திருக்குவளை சென்று பின்னர் கொளப்பாடு பிரதான சாலையில் காருக்குடி நோக்கி சென்றுள்ளார்.

கார்குடி மெயின் ரோடு பகுதியில் முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத லாரியின் பின்புற பகுதியில் இருசக்கர வாகனம் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிருத்திவிராஜ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். லேசான காயங்களோடு தமிழரசன் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருக்குவளை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

லாரியின் மீது அதிவேகத்தில் வந்த இருசக்கர வாகன மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்ட காட்சிகள் அதில் பதிவாகியுள்ளது. மேலும் இளைஞர் உயிரிழந்த இடத்தில் அவரது உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்தது.


Watch – YouTube Click

What do you think?

ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது?