in

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களுடைய விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது


Watch – YouTube Click

தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களுடைய விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது

 

கரூர் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து கரூர் பேருந்து நிலையம் அருகே நடிகை கௌதமி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடையே கேட்டுக்கொண்டார். பொதுமக்களுக்கு கை கொடுத்தும் வரவேற்றனர்.

நடிகை கௌதமி பொது மக்களிடையே தங்கவேலுக்கு ஆதரித்து வாக்கு சேகரித்த போது பேசுகையில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தலைவர்கள் இளம் விதவைகள் அதிகமாக உள்ளனர் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மதுபான கடைகளையும் ஒரே நேரத்தில் மூடுவோம் என வாக்குவாக்குறுதி அளித்தனர் ஆனால் அதை செய்யவில்லை அதற்கு மேலாக மதுபான கடைகளின் எண்ணிக்கைகளை அதிகரித்துள்ளனர்

குடும்பங்கள் மீது அக்கறை இல்லையா? வியாபாரிகளுக்கு வரும் லாபத்தை மட்டும் முக்கியம் இதுதானே உண்மை

ஒருபுறம் மதுபான கடை மற்றொருபுறம் போதைப் பொருட்கள் விற்பனை

சினிமா காட்சிகளில் வருவது போல் தற்போது இளைஞர்கள் போதை பொருட்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்

அந்த போதைப் பொருட்களை ஒரு முறை பயன்படுத்தினால் அதைத்தொடர்ந்து பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகி விடுகின்றனர் இளைஞர்கள்

குழந்தைகளின் எதிர்காலம் தங்களது சொந்த லாபத்திற்காக போதை பொருட்கள் விற்று பணம் சம்பாதிக்கும் லாபத்திற்காக தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்களுடைய விற்பனை பரவலாக நடைபெற்று வருகிறது

ஒரு மாநிலத்தில் இப்படிப்பட்ட வியாபாரம் இவ்ளோ வெளிப்படையாகவும் தைரியமாகவும் செய்கிறார்கள் என்றால் அரசாங்கத்தின் துணை இல்லாமல் நடைபெறாது.


Watch – YouTube Click

What do you think?

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தெருக்கூத்து நாடக கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு

பொய்யை மட்டும் முதலீடாக வைத்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்