in

40 லட்சம் மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு வழங்கியவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு


Watch – YouTube Click

40 லட்சம் மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு வழங்கியவருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

 

சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி கிராமத்தில் 40 லட்சம் மதிப்பிலான நிலத்தை பள்ளிக்கு வழங்கியவருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பாராட்டு தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் எம் புதுப்பட்டி கிராமத்தில் குருசாமி – குருத்த மொழி ஆகியோருக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளது. இவர்கள் அமெரிக்காவில் குடியேறிவிட்டனர்.

இவர்கள் இறந்த நிலையில் மகன் குருசாமி மணிவண்ணன் எம். புதுப்பட்டி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தினை அவரது சித்தி முன்னாள் தலைமை ஆசிரியை பரமேஸ்வரி மூலம், கிராமத்தில் மேல்நிலைப்பள்ளி பணிக்காகவும், பள்ளி வளர்ச்சிக்காகவும் விருதுநகர் மாவட்ட கல்வித்துறைக்கு தானமாக, மாவட்ட ஆட்சியர் மூலம் நிலப் பத்திரங்களை வழங்கினார்.

பரமேஸ்வரியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மத்திய அணுசக்தி துறையின் சார்பில் புதுப்பட்டினம் ஊராட்சியில் 5 ஆயிரம் ஆர்.ஓ. வாட்டர் இயந்திரம்

கட்டுமான தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்