in

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைரக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைரக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

 

மலையாள படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தற்பொழுது தமிழகத்தில் வசூலை மாறி குவிக்கிறது குறைந்த பட்ஜெட்டில் உருவான ஏற்படும் தற்பொழுது 100 கோடியை தாண்டி வசூல் செய்து திரை உலகத்தினர் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

இந்நிலையில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் மீது நடிகை பிராப்தி எலிசபெத் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார். எலிசபெத் இவரது இயக்கத்தில் ஜான்-இ-மான் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது இயக்குனர் சிதம்பரத்தை பற்றியும் அவரது, நண்பர்கள் பற்றியும் நான் சில விஷயங்களை கூற விரும்புகிறேன் என்று கூறினார்.

இயக்குனர் சிதம்பரம் எனக்கு வாட்ஸ் அப்பில் அடிக்கடி குறுஞ்செய்திகள் அனுப்புவார் ஆண்களின் விரல்கள் எப்பொழுதும் பெண்களை நோக்கி தான் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் ஆண்கள் என்ன செய்தார்கள் என்பதை இந்த சமூகம் கண்டு கொண்டதும் இல்லை ஏற்றுக்கொண்டதும் இல்லை.

இதனால் அவர் என்ன செய்தார் என்பதை நான் வெளியில் சொல்ல முடியாத மனவேதனையில் இருக்கின்றேன் எனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிராக நான் என்ன செய்ய முடியும் நீங்களே சொல்லுங்கள் என்று ரசிகர்களை கேட்டார்.

நடிகை எலிசபெத்தின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

What do you think?

மீண்டும் மீண்டு திரும்பிய சமந்தா

தங்கலான் படத்திற்கு இப்படியொரு சிக்கலா