in

மீண்டும் மீண்டு திரும்பிய சமந்தா

மீண்டும் மீண்டு திரும்பிய சமந்தா

 

தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா.

மயோசிட்டிஸ் என்ற நோய் காரணமாக நடிப்பிலிருந்து விலகினார். பல சிகிச்சைகளுக்கு பிறகு நோய் குணமாகி விட்டதால், தற்பொழுது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

இது குறித்து தன் ரசிகர்களுக்கு மும்பையில் ஒரு நெகிழ்ச்சியான பேட்டி ஒன்று அளித்துள்ளார். நான் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுதே ஒன்றை வருடம் எனது சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து விலகி இருந்தேன்.

இது எவ்வளவு பெரிய சவாலான விஷயம் ஆனாலும் என் உடல் நிலை காரணமாக என்னால் இதை தவிர்க்க முடியவில்லை நடிப்பை விட ஆரோக்கியம் தான் முக்கியம் என்று உணர்ந்த நான் எதிர்காலத்தில் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இந்த கடுமையான முடிவை நான் எடுத்தேன்.

நான் சினிமா விட்டு விலகி இருந்தாலும் எனது ரசிகர்களை விட்டு நான் விலகி இருக்கவில்லை. எப்பொழுதும் அவர்களுடன் தொடர்பில் இருக்கின்ற நான் மீண்டும் நடிக்க வந்திருக்கின்றேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தெரிவிக்கின்றேன்.

இனிமேல் என்னுள் இருக்கும் புதுமையை பார்ப்பீர்கள் என்றார் சமந்தா.

What do you think?

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வட மாநில இளைஞர் பொதுமக்கள் செய்த செயல்

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் டைரக்டர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு