in

வ.உ. சிதம்பரனார் குறித்து அவதூறு பரப்பிய திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து ஆர்ப்பாடம்


Watch – YouTube Click

வ.உ. சிதம்பரனார் குறித்து அவதூறு பரப்பிய திமுக எம்பி ஆ ராசாவை கண்டித்து ஆர்ப்பாடம்

 

விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் குறித்து அவதூறு பரப்பி வரும் திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் ராஜபாளையத்தில் 7 ஊர் பொது மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள பஞ்சு மார்க்கெட் நேரு சிலை எதிரே திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மம்சாபுரம், துலுக்கன் குளம், வாகைக்குளம் பட்டி, வைத்தியலிங்கபுரம், அய்யனாபுரம் உள்ளிட்ட 7 கிராமங்களில் வசிக்கும் வீரகொடி வெள்ளாளர் உறவின் முறையை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்பி. ஆ ராசா, வஉசிதம்பரனார் தனது மகனின் வேலைக்காக பெரியாரிடம் உதவி கேட்டு நின்றதாக அவதூறு பரப்பி பேசியதாக போராட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வாறு அவதூறு பரப்பும் ஆ. ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் போராட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

 பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்த இஸ்லாமிய கூட்டமைப்பினர்

பள்ளிகளில் இடைநிற்றல் இல்லா மாவட்டமாக மாற்ற கள ஆய்வினை மேற்கொண்ட ஆட்சியர்