in

தவறவிட்ட நகை உரியவர்களிடம் கொடுத்த நபருக்கு காவல்துறை பாராட்டு


Watch – YouTube Click

தவறவிட்ட நகை உரியவர்களிடம் கொடுத்த நபருக்கு காவல்துறை பாராட்டு

 

கும்பகோணம் திரையரங்கில் தவறவிட்ட நகை உரியவர்களிடம் ஒப்படைப்பு
நகையை எடுத்து காவல்துறையிடம் கொடுத்த நபருக்கு காவல்துறை பாராட்டு

அணைக்கரையை சேர்ந்த விஜய் என்பவர் நேற்று கும்பகோணத்தில் உள்ள திரையரங்கில் திரைப்படம் பார்த்து உள்ளார்.

அப்போது திரைப்படத்தின் இடைவேளையில் வெளியே வந்த அவருக்கு காலில் ஏதோ பொருள் சிக்குவது போல் இருந்தது அதை எடுத்துப் பார்த்தபோது கழுத்தில் அணியும் தங்க நகை என்பது தெரியவந்தது உடனடியாக திரையரங்கு பணியாளர்களிடம் இவ்வாறு நகை ஒன்று நான் கீழே இருந்து எடுத்து உள்ளேன் நகை யாரும் கேட்டு வந்தால் என்னிடம் இருப்பதாக கூறுங்கள் என சொல்லி அவர் கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தாரிடம் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்.

குடவாசலை சேர்ந்த சுதா என்பவர் திரையரங்கினுள் தவறவிட்ட நகை குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வரவே அவரை காவல்துறையினர்
விசாரணை செய்து அந்த 12 கிராம் தங்க நகையை ஒப்படைத்தனர்.

80 ஆயிரம் மதிப்புள்ள நகையை எடுத்து மறைக்காமல் காவல்துறையிடம் ஒப்படைத்த அந்த இளைஞரின் நேர்மையை பாராட்டி காவல் துறையினர் சால்வை அணிவித்து வெகுவாக பாராட்டினர்.


Watch – YouTube Click

What do you think?

இஸ்ரேலை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா சார்பில் கண்டன முழக்கமிட்ட சிறுவர் சிறுமியர்கள்

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட வனத்துறையினர்