in

வடை சுட்ட மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக சுட்ட வடையை கையில் ஏந்தி நூதன பிரச்சாரம்


Watch – YouTube Click

வடை சுட்ட மத்திய பிஜேபி அரசுக்கு எதிராக சுட்ட வடையை கையில் ஏந்தி நூதன பிரச்சாரம்

 

நாகப்பட்டினம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்த திட்டங்கள் பொதுமக்களிடம் வந்து சேர வில்லை என கூறி நாகை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் தலைமையிலும் நாகை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன் முன்னிலையிலும் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யப்பட்டது.

இதில் 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சிப் புரியும் பிஜேபி அரசு தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற வில்லை என கூறி வாயில் வடை சுட்ட பிஜேபி அரசுக்கு எதிராக சுட்ட வடையை கையில் ஏந்தி நூதன முறையில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் நாகை நகரமன்ற உறுப்பினரும், நகர திமுக செயலாளருமான மாரிமுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் வடவூர் ரா‌ஜேந்திரன், மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட திமுக பொருளாளர் லோகநாதன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பாலு உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

இலங்கையில் நல்லடக்கம் செய்யப்பட்ட சாந்தனின் உடல்

பாஜகவை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை