in

சிவகாசி அருகே பட்டாசு கழிவுகள் தீப்பற்றி எரிந்தது


Watch – YouTube Click

சிவகாசி அருகே பட்டாசு கழிவுகள் தீப்பற்றி எரிந்தது

 

சிவகாசி அருகே பட்டாசு கழிவுகள் தீப்பற்றி எரித்த 3 வாலிபர்களுக்கு பலத்த தீக்காயம்….

விருதுநகர் மாவட்டம், சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட செங்கமலப்பட்டி பகுதியில் காலி மனையில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் விடுமுறை நாளில் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம்.

இந்த நிலையில் சிவகாசி அருகே உள்ள அய்யனார்காலனி பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவரின் மகன் கார்த்திக் (வயது 23), சதீஷ்குமார் என்பவரின் மகன் கருப்பசாமி (21), முத்துராமலிங்கம்நகரை சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துராஜ் (19) ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.

அப்போது அங்கு அதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் இருந்து கொண்டு வந்து கொட்டப்பட்டதாக கூறப்படும் பட்டாசு கழிவுகளில் சிகரெட் தீப்பொறி துண்டு விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் பட்டாசு கழிவுகளில் இருந்த வெடி மருந்துகள் தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் கார்த்திக், கருப்பசாமி, முத்துராஜ் ஆகிய மூன்று பேரும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் 3 வாலிபர்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் உள்ள தீக்காய சிகிச்சை பிரிலில் சேர்த்தனர். அங்கு அவர்க ளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா குடவருவாயில் தீபாராதனை

வாகன ஓட்டுநர் சங்கங்களை ஒன்றிணைத்து போராட்டம்