in

பெற்றோரிடம் சண்டை …. வீட்டைவிட்டு வெளியேறிய அன்பே வா சீரியல் விராட்.. போராட்டமான காதல் கதை


Watch – YouTube Click

பெற்றோரிடம் சண்டை …. வீட்டைவிட்டு வெளியேறிய அன்பே வா சீரியல் விராட்.. போராட்டமான காதல் கதை

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா என்ற சீரியலில் நடிக்கும் விராட்டிற்கு அவரின் நீண்ட நாள் காதலியுடன் நேற்று மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது திருமணம் முடிந்த உடன் தனது காதல் மனைவியுடன் தங்களது காதல் போராட்டம் பற்றி சமூக வலைத்தளத்தில் பேட்டி கொடுத்தனர்.

தனது திருமணத்திற்கு அம்மா சம்மதிக்கவில்லை என்றும் அதனால் வீட்டில் நடந்த பிரச்சனையால் அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக விராட் கூறினார்.
நடிகர் விராட் பியூட்டிசியன் நவீனாவை காதலித்து வந்தார் இவர்களுடைய திருமணத்திற்கு இருவர் வீட்டிலும் முதலில் சம்மதிக்கவில்லையாம் .

விராட்டுக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கும் போது நவீனாவின் அம்மாவும் அவருக்கு மாப்பிளை பார்த்துக் கொண்டிருந்தார்களாம் அப்பொழுது நவீனாவின் அம்மா உனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்க அவர்கள் வீட்டில் ஓடிக் கொண்டிருந்த அன்பே வா சீரியலை பார்த்து இப்படிப்பட்ட மாப்பிள்ளை தான் எனக்கு வேண்டும் என்று கூறினாராம் விராட்டின் தோழி மூலம் அறிமுகமான நவீனாவுடன் ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறியது .

ஒரு நாள் நவீனா விராட்டை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்ற போது சீரியலில் பார்த்த அந்த பையனையே காதலிகிராயா என்று ஆச்சரியமாக கேட்டார் ஆனால் விராடின் அம்மா சம்மதிக்காததால் வீட்டுக்கு போனாலே தினம் தினம் சண்டை அதனால் பல நாட்கள் வெளியில் தங்கி இருந்த விராட்டிடம் ஒரு நாள் என் அம்மா உன் காதலை புரிந்து கொண்டேன் நீ உன் காதலில் ஸ்ட்ராங்கா இருக்குறியா ..இன்னு டெஸ்ட் பண்ண தான் இத்தனை நாட்கள் மௌனமாக இருந்தேன் என்று கூறினாராம் நவீனாவின் அம்மாவும் தயங்கியதற்கு காரணம் நவீனா இவரை விட வயதில் மூத்தவராம் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் பெற்றோர்கள் கிரீன் சிக்னல் காட்டி விட்டார்கள் என்று கண்களில் கண்ணீர் மலக்க தன் காதல் கதையை கூறினார்.

அன்பே வா சீரியலில் என் character எப்படியோ அதேபோலவே எந்த தருணத்திலும் நவீனாவை விட்டுக் கொடுக்காமல் வாழ்நாள் முழுவதும் அவரை நேசிப்பேன் என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

கையில் கட்டுடன் ரஷ்யாவில் இருந்து வாக்களிக்க வந்த தளபதி விஜய்

அரண்மனை 4 ரிலீஸ் தேதி மாற்றம்…. சிங்கம் சிங்குளா ஏறங்குதாம்