in

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய AR ரகுமான்

தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்திய AR ரகுமான்

தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்திய இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 18 வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டமாக நடக்க உள்ள நிலையில் அரசியல்வாதிகளும் சினிமா துறை பிரபலங்களும் தேர்தல் பிரச்சாரங்களை நேற்றுடன் முடிந்த நிலையில் மறுபுறம் தேர்தல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம்.

அது தொடர்பாக இசையமைபாளர் AR ரகுமானும் மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது எக்ஸலத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கியமான கடமை. 2024-ல் நடைபெறும் இந்த மக்களவை தேர்தலில் வாக்களிக்க அதிகளவிலான இளைஞர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

அனைத்து மக்களையும், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் வந்து வாக்களித்து மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை உலகம் வியக்க பார்க்க செய்வோம் என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை அவர்களது ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகிறது.

What do you think?

அன்பே வா சாக்லேட் பாய் விராட் தனது காதலியை இன்று கரம் பிடித்தார்

புதுச்சேரி ஓய்வு பெற்ற ஜஜி சந்திரனின் மகள் வினோதினி யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 64 இடம்