in

என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு பேரணி 


Watch – YouTube Click

என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு பேரணி 

 

இராஜபாளையத்தில் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியைத்து துவங்கி வைத்து பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் ஊர்வலமாக நடந்து சென்று வாக்களிப்பதின் விழிப்புணர்வை எடுத்துரைத்தார்.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தனியார் வளாகத்தில் இருந்து என் வாக்கு விற்பனைக்கு அல்ல வாக்காளர்கள் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது .

இந்த பேரணியை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கொடியசைத்து துவக்கி வைத்து கல்லூரி மாணவர்களுடன் நடந்து வந்து தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தங்கள் வாக்கு ஜனநாயகத்தை மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் பெற்றது என்பதை எடுத்துரைத்து என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற கோஷங்கள் எழுப்பி கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி தனியார் பள்ளியில் இருந்து காந்தி சிலை ரவுண்டானா வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது இந்த பேரணியில் ராஜுக்கள் கல்லூரி ராம்கோ ஆர் ஐ டி உள்ளிட்ட கல்லுரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கோசங்களை எழுப்பி பேரணியில் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை கண்டறியப்பட்டுள்ளது

முன் விரோதம் காரணமாக அதிமுக நகர கழக செயலாளர் மீது கொலைவெறி தாக்குதல்