in

சிவகாசியில் வெறி செயல்


Watch – YouTube Click

 

சிவகாசியில் வெறி செயல்

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வாலிபரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் 5 வாலிபர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதிநகரை சேர்ந்தவர் கண்ணன் மகன் குணசேகரன் (24). இவருக்கும் திருத்தங்கல் ஆலவூரணியை சேர்ந்த சில வாலிபர்களுக்கும் கடந்து சில மாதங்களுக்கு முன்பு முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 28ஆம் தேதி இரவு சிவகாசி அருகே திருத்தங்கல் நெற்குத்திபாறை அருகே நின்று கொண்டிருந்த வாலிபர் குணசேகரனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்து தப்பி ஓடியது.

இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த சுரேஷ்லிங்கம் (எ) யானைக்காதன் (23) பெருமாள் மகன் சுரேஷ் (26) மாரிச்செல்வம் (எ) ஊளைமூக்கன் (25) காளிமுத்து (எ) கேசவன் (20) திருத்தங்கல் காளிமுத்து நகரை சேர்ந்த கார்த்திக் (19) ஆகிய 5பேர் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த 5பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் சுரேஷின் தந்தை பெருமாளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் விரட்டியதில் 2பேர் காயம்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சிவகாசியின் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்த சுரேஷ்லிங்கம், மாரிசெல்வம், கார்த்திக், காளிமுத்து என்கிற கேசவன் ஆகிய 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதில் செங்கமலபட்டி பகுதியில் உள்ள தனியார் கல் குவாரியில் தனிப்படை போலீசார் விரட்டி செல்லும்போது தப்பி ஓட முயன்ற மாரிச்செல்வம், சுரேஷ்லிங்கம் எதிர்பாராதவிதமாக சறுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இதில் மாரிச்செல்வத்துக்கு கால் எலும்பும், சுரேஷ்லிங்கத்துக்கு கை எலும்பும் முறிந்ததாக கூறப்படுகிறது. உடடியாக 2 பேரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்தவமனையில் போலீசார் சேர்த்தனர். 2பேருக்கும் மாவுகட்டு போட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேக விழா

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி