ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் ஆடி பிரும்மோத்ஸவ திருவிழா
குத்தாலம் அருகே செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் ஆடி பிரும்மோத்ஸவ திருவிழா. ஐந்தாம் நாள் உற்சவமான திருக்கல்யாண வைபவம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருத்துருத்தி என்கின்ற குத்தாலத்தில் பிரசித்திப்பெற்ற செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஆடி பிரம்மோத்ஸவ திருவிழா கடந்த எட்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் சேஷ வாகனம்,குதிரை வாகனம், அனுமந்த வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வந்தது.
ஐந்தாம் நாள் உற்சவமான திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஏராளமான பெண்கள் ஆலயத்திற்கு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

செங்கமலத் தாயார் சமேத ஆதிகேசவப் பெருமாள் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு பின்னர் மாலை மாற்றுதல் உற்சவம், கன்னிகாதானம் செய்யப்பட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டுச் சென்றனர் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


