in

சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போது காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு


Watch – YouTube Click

சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போது காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு

 

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த மணிகண்டன், அச்சரப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தொழு பேடு சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போது சாலை விபத்து ஏற்பட்டு, மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

காவலர் மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அச்சரப்பாக்கம் அருகே உள்ள வெங்கடேஷபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக காவலரின் உடல் வைக்கப்பட்டிருந்தது.

இந்த இறுதி அஞ்சலி நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சாய்பீரிணீத், மதுராந்தகம் டிஎஸ்பி சிவசக்தி மற்றும் மதுராந்தகம் உட்கோட்டத்தில் உள்ள ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் சக காவலர்கள் அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

காவலர் மணிகண்டன் உடன் நல்லடக்கம் செய்வதற்காக வெங்கடேசபுரம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அங்கு பணியின் போது இறந்த காவலர் மணிகண்டனுக்கு அரசு மரியாதையான 30 குண்டுகள் முழங்க அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் பிரிவுகளில் குற்றப்பத்திரிகை

அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்