திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபலங்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா, தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, நடிகர்கள் பிரபு, திருவீர் உள்ளிட்ட பிரபலங்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தனர்.

தரிசனத்தைத் தொடர்ந்து, அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும், வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க வேத ஆசிகளை வழங்கினர்.