மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆனி மாத கிருத்திகை ஊஞ்சல் உற்சவம்
திண்டிவனம் அடுத்த மயிலம் மலைமேல் அமைந்த வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு உட்பிரகாரம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

பஞ்சமுக கற்பூர ஆரத்தி மற்றும் கும்ப தீபம்,கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


