in

தெறிக்க விடும் அரசியல் வசனத்துடன் ரெடி…யாகும் தளபதியின் அடுத்த படம்

தெறிக்க விடும் அரசியல் வசனத்துடன் ரெடி…யாகும் தளபதியின் அடுத்த படம்

தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது கோட் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே இதற்கிடையில் தனது அரசியல் சதுரங்க வேட்டையிலும் இறங்கிவிட்டார்.

GOAT படத்திற்கு பிறகு அவர் முழு நேர அரசியல் பணியில் ஈடுபட இருப்பதால் படங்களில் நடிப்பதை தவிர்ப்பார் என்றும் கூறப்படுகிறது. அதனால் இவரின் கடைசி படமான GOAT எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும் பட்சத்தில் கோட் என்ற டைட்டில் அந்த அளவிற்கு ஹைப்பை ஏற்படுத்தவில்லை என்று ரசிகர்கள் குறைப்பட்டும் வருகின்றனர்.

நடிகர் விஜய்யோ கோட் திரைப்படத்திற்கு பிறகு தன் அரசியல் பணியை மக்கள் மனதில் விதக்கும் விதமாக வெயிட்டாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று கதையை தேர்வு செய்யும் பணியில் மும்முறமாக இருக்கிறாராம்.

இவரின் அடுத்த படத்தை இயக்குவதற்கு இயக்குனர்கலும் பேப்பரும் பேனாவுமாக கார்த்திக் சுப்புராஜ், அட்லி, ஹெச் வினோத், வெற்றிமாறன், ஆகியோர் கியூவில் நிற்க, கார்த்திக் சுப்புராஜா அந்த லைனில் இருந்து எஸ்கேப் ஆகி விட்டாராம் ஏனென்றால் விக்ரமின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக தகவல் கசிந்துள்ளது.

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் விக்ரமின் வெற்றி படமான மகான் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணியில் மும்முரமாக இருக்கிறாராம் சுப்புராஜா, எதிரெதிர் துருவங்களாக இருக்கும் தந்தைக்கும் மகனுக்கு இடையே நடக்கும் ஆக்சன் மற்றும் தில்லர் கலந்த கதைதான் மகான் படம்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் மகான் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு மகான் 2 என்ற கேள்வி குறியுடன் தன்வளை பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

மகான் 2 விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம் என்று நம்ம சியானுக்கு தெரியாதா என்ன வெற்றி மகிழ வைக்கும் , தோல்வி சிந்திக்கவைக்கும்..

What do you think?

என் காதலியை கூடதான் சங்கி என்று கூப்பிடுவேன்..அப்போ அவர் சங்கியா நக்கல் பண்ணிய சந்தானம்

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரி… என் வீடியோவின் கீழ் ஏன் இப்படி கமெண்ட் போட்டீர்கள்…