in

காதலர் தினதன்று யாரும் அறியாத தன் கடந்த கால காதலை வெளியிட்ட நடிகைகள்

காதலர் தினதன்று யாரும் அறியாத தன் கடந்த கால காதலை வெளியிட்ட நடிகைகள்

எந்த நிலையிலும் வரலாம்… எந்த வயதிலும் வரலாம்… அது ஒன்றல்ல இரண்டல்ல மூன்று நான்கென்று எத்தனை முறை வேண்டுமானாலும் வரலாம்… ஆனால் என்னதான் அது என்ற இருதயத் துடிப்புக்கும்… எப்போதுதான் நேரும் என்ற தவிப்புக்கும் இடைவெளியில் நேருகின்ற துன்பம் கலந்த இன்பம்தான் அதன் பெயர்தான் “காதல்”..

நாங்களும் அந்த துன்பத்தை அனுபவிதோம் என்று நடிகைகள் பலர் காதலர் தினத்தை ஒட்டி தங்களுக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தை மனம் திறந்து நேற்று வெளியிட்டனர்,

அதிதி தன் முதல் காதல் அனுபவம் பற்றி கூறும் பொழுது நான் பள்ளியில் படிக்கும் பொழுது ஒரு சீனியர் மாணவர் எனக்கு இரண்டு காதல் கடிதம் கொடுத்தார் அதை பலமுறை படிக்கும் ’பொழுது எனக்கு த்ரில்லிங்காக இருந்தது கடிதம் விஷயம் அம்மாவுக்கு வெளியில் தெரிந்தவுடன் என்னை போடிங் ஸ்கூலில் மாற்றி விட்டார் என்றார்.

நடிகை சாய் பல்லவி தனது கடந்த கால காதலை பற்றி கூறிய பொழுது நான் எழுதிய முதல் மற்றும் கடைசி காதல் கடிதம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு மாணவனை காதலித்தேன் அவரும் என்னை காதலித்தார் கடிதம் எழுதினார் நானும் ஒரு கடிதம் எழுதினேன் ஆனால் அந்தப் பையனுக்கு அதை கொடுக்கும் தைரியம் எனக்கும் வரவில்லை அதனால் அந்த கடிதத்தை என்னிடம் வைத்துக் கொண்டேன்.

ஒரு நாள் வீட்டில் அந்த கடிதத்தை பார்த்துவிட்டு எனக்கு பயங்கரமாக அடி உதை கிடைத்தது அந்த வயதில் அதுபோன்ற ஒரு கடிதம் எழுத என்னால் எப்படி முடிந்தது என்று இன்றுவரை எனக்கு புரியவில்லை இப்பொழுது அதை நினைத்து பார்க்கும் போது எனக்கு சிரிப்பாக வருகிறது என்றார்.

What do you think?

பிரபல நடிகை கோர்ட்டில் ஆஜராக கூடாது என்று மிரட்டும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்

அப்பளம் தயாரிக்கும் இயந்திரத்தில் சிக்கியம் பெண் 32 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு