in

பிரபல நடிகை கோர்ட்டில் ஆஜராக கூடாது என்று மிரட்டும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்

பிரபல நடிகை கோர்ட்டில் ஆஜராக கூடாது என்று மிரட்டும் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர்

தொழிலதிபர் மனைவியிடம் 200 கோடி மோசடி செய்து தற்பொழுது டெல்லியில் உள்ள சிறையில் இருக்கிறார் சுகேஷ் சந்திரசேகர்.

இவர் பிரபல இந்தி நடிகை ஜாக்குலினுடன் தொடர்பில் இருந்தபோது இந்த மோசடி பணத்தில் அவருக்கு நிறைய பரிசு பொருட்கள் வாங்கி தந்ததாகவும் இந்த மோசடியில் அவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் போலீசார் விசாரணையில் இறங்கினர்.

இதை அடுத்து ஜாக்குலீனுக்கு அமலாக்கத்துறை சமன் அனுப்பி அவரையும் விசாரிக்க குற்றப்பத்திரிக்கையில் ஜாக்குலின் பெயரை சேர்க்கப்பட்டது.

மேலும் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும் படி டெல்லி கோர்ட்டில் ஜாக்குலின் மனு தாக்கல் செய்தார், சுரேஷ் தன்னை திட்டமிட்டு இந்த வழக்கில் சிக்க வைப்பதாகவும் தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டார்.

மேலும் சுகேஷ் சிறையில் இருந்து கொண்டு என்னை கோர்ட்டுக்கு ஆஜராக கூடாது என்று மிரட்டுவதாகவும் ஆட்களை அனுப்பி தன்னை துன்புறுத்துவதாகவும் இதனால் என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் சிறையில் இருக்கும் சுதேஷ் சந்திரசேகரன் எப்படி வெளியில் இருப்பவர்களோடு தொடர்பு கொள்ள முடிகிறது என்பதையும் காவல்துறை விசாரிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டார்.

What do you think?

ஏ ஐ தொழில் நுட்பத்தின் முலம் மீண்டும் விஜயகாந்த் நடிக்கிறார்

காதலர் தினதன்று யாரும் அறியாத தன் கடந்த கால காதலை வெளியிட்ட நடிகைகள்