in

ராதாரவி போல தவறான ஆளுங்க இருக்கும் இடத்திற்கு நான் ஏன் போக வேண்டும் … பாடகி சின்மயி

ராதாரவி போல தவறான ஆளுங்க இருக்கும் இடத்திற்கு நான் ஏன் போக வேண்டும் பதிலடி கொடுத்த பின்னணி பாடகி சின்மயி 

தறகுறைவாக பேசிய ராதாரவிக்கு பதிலடி கொடுத்த பின்னணி பாடகி சின்மயி தென்னிந்திய சினிமா சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் மார்ச் 17ஆம் தேதி நடக்க உள்ளது.

இதில் நீண்ட காலமாக பதவி வகித்து வரும் ராதாரவி மீண்டும் போட்டியிட முடிவுசெய்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த நடிகர் ராதாரவியிடம் சின்மயியை மீண்டும் யூனியனில் சேர்த்துக் கொள்வீர்களா என்று கேட்டபோது அதற்கு ராதா ரவி கூறியதாவது.

நான் அவரை வெளியே அனுப்பவில்லை ஒவ்வொரு வருடமும் சந்தா கட்ட வேண்டும் கட்டவில்லை என்றால் மெம்பர்ஷிப் கட் ஆகிவிடும். சந்தா கட்டாததால் அவர்தான் தனது உரிமையை இழந்து விட்டார் .

மீண்டும் சங்கத்தின் கட்டடத்திற்கு வெளியே வேண்டுமானால் நிற்கட்டும் ஆனால் நிச்சயம் காம்பவுண்டில் கூட உள்ளே நான் சேர்க்க மாட்டேன் என்று நக்கலாக பேசியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்த பாடகி சின்மயி தனது எக்ஸலத்தில் ஆவேசமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது மலேசியா நாடு வழங்காத போலியான டத்தோ பட்டத்தை தனக்கு தானே சூட்டிக்கொண்டு டத்தோ வளாகம்னு அந்த டப்பிங் யூனியனுக்கு பெயர் வைத்து பில்டிங் எல்லாமே இல்லிங்களா கட்டப்பட்டது என்று கார்ப்பரேஷன் சீல் வச்சு அந்த கட்டிடத்தையே தரை மட்டும் ஆக்கிட்டாங்க.

டப்பிங் யூனியன் மெம்பர்ஸ் கொடுத்த காசு எல்லாம் மண்ணோடு மண்ணா போச்சு அவர்களுடைய உழைப்பும் வீணாகிப் போகிவிட்டது. இவரை போல அப்யூசிவ் ஆளுங்க எல்லாம் இருக்கும் அந்த காம்பவுண்டுக்குள் நான் எதற்கு போக வேண்டும் அதற்கு அவசியமே இல்லை என்று பதிவிட்டுள்ளார்.

What do you think?

2015 ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருது வழங்கும் இன்று நடைபெற உள்ளது

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்