in

சீமானின் சின்னம் என்ன மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்


Watch – YouTube Click

சீமானின் சின்னம் என்ன மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல்

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்ததுடன், சீமானின் சின்னம் என்ன என்ற விளம்பர பதாகை ஏந்திய நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளாக கருதப்படும் திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அந்தந்த தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி பாராளுமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இசை மதிவாணன் தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாட்டு வண்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்களுடன் வழிநெடுக கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கமல் கிஷோரிடம் வழங்கினார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் கடும் விமர்சனம்

ஜெயம் ரவியால்… thuglife….படத்தில்….வெளியேறிய துல்கர்