in

விஜயகாந்தின் 100-வது நாள் சமாதிக்கு கூட செல்லாமல் வாக்கு கேட்ட விஜய்பிரபாகரன்


Watch – YouTube Click

விஜயகாந்தின் 100-வது நாள் சமாதிக்கு கூட செல்லாமல் வாக்கு கேட்ட விஜய்பிரபாகரன்

 

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் விஜய்பிரபாகரன் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட சாத்தூர் அருகே வாழவந்தாள்புரம், இராமலிங்காபுரம், ரூக்குமிஞ்சி, அம்மாபட்டி, கத்தாளம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய விஜயபிரபாகரன் இன்று எனது தந்தை விஜயகாந்தின் நூறாவது நினைவு நாள் சமாதிக்கு அஞ்சலி கூட செலுத்தாமல் தங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

அனைவரும் எனக்கு வாக்களிக்க வேண்டும். துளசி கூட வாசம் மாறுமே தவிர இந்த தவசி பிள்ளை வார்த்தை மாற மாட்டேன்.

உங்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பேன் என எனக்கு கொட்டும் முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள் என கூறி சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது தேமுதிக கட்சியை சேர்ந்த நிர்வாகி பிரச்சார வாகனத்தின் முன்பகுதியில் ஏறி சால்வை அணிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட 15 கிராமத்திலும் ஒரே மாதிரி பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ப்த்தியை ஏற்படுத்தியது.

மேலும் இந்த வாக்கு சேகரிப்பின் போது அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், தேமுதிக நிர்வாகிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மயிலாடுதுறையில் சென்சார் வைத்து சிறுத்தையை தேடுதல் வேட்டை

நவீன ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் ஆய்வு