in

வீசிய மாலையை சூடிய விஜய்..புதுவை ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட தளபதி

வீசிய மாலையை சூடிய விஜய்..புதுவை ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட தளபதி

புதுவை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தளபதி விஜய். சமீபத்தில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் புதுச்சேரியில் உள்ள ரோடியர் மில்லில் படமாக்கப்பட்டது.

அதேபோல வெங்கட் பிரபு இயக்கம் கோட் படத்தின் சில காட்சிகள் ஞாயிறன்று புதுச்சேரியில் உள்ள ரோடியர் மில் மைதானத்தில் எடுக்கப்பட்டது. சென்னையில் ஷூட்டிங் முடிந்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக புதுச்சேரிக்கு வந்தது பட குழு சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு காரில் வந்த விஜய் புதுவையில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்தார்.

இதனை அறிந்த புதுச்சேரி மக்கள் ரோடியர் மில் முன்பு திரண்டனர் இதனால் ரோடியன் மில்லின் நுழைவாயில் மூடப்பட்டது. ரசிகர்களின் கூட்டங்களை தடுக்க முடியாத போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து வாகனங்களையும் 100 அடி ரோடு வழியாக செல்லும்படி மாற்றிவிடப்பட்டது.

இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலை 5:45க்கு ரோடியர் மில்லில் இருந்து வெளியே வந்தார் நடிகர் விஜய் பின்பு அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனில் ஏறி அங்கு இருந்த ரசிகர்களுக்கு கை அசைத்தார்.

ரசிகர்களும் தளபதி வாழ்க வாழ்க என்று கோஷமிட்டனர். சிலர் அவர் மேல் மலர்களை தூவினர். அப்பொழுது அவர் மேல் ஒரு மாலை விழுந்தது அந்த மாலையை பிடித்து கழுத்தில் அணிந்து கொண்டு புன்னகையுடன் கையை அசைத்தார் விஜய்.

பின்னர் அந்த மாலையை கழட்டி ரசிகர்கள் மீது வீசினார். ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார் சிறிது நேரம் அவர்களை குஷிப்படுத்திய விஜய் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்குள் சென்றார் .

மீசையில்லாமல் ஷேவ் செய்யப்பட்ட புதிய தோற்றத்தில் கோட் படபிடிப்பு தளத்தில் காட்சி கொடுத்தார், விஜய் உடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட செல்பி மற்றும் வீடியோக்கள் தற்பொழுது வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

What do you think?

பாஜக மற்றும் கூட்டணி அரசு கண்டித்து அதிமுக சார்பில் புதுச்சேரியில் பேரணி

லால் சலாம் படத்தை திரையிட தடை ..கமிஷனர் அலுவலகத்தில் புகார்.. கடைசிநேர கடுகடுப்பு