in

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்


Watch – YouTube Click

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தமிமுல்அன்சாரி தலைமையில் கடந்த 23ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஒருங்கிணைந்த முதுநிலை பட்டியலில் சேர்க்க வேண்டும் பட்டதாரி அல்லாதோருக்கான பதவி உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 27ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாநில தலைமையின் முடிவின்படி நாடாளுமன்ற தேர்தல் பணிகளை புறக்கணிப்பது என்றும் இன்று இரவு முதல் இரவு பகலாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் தனஞ்செயன், மாவட்ட பொருளாளர் ரகு, மாவட்டத் துணைத் தலைவர் கபிலன், மாவட்ட இணைச்செயலர் பிரபாகர், நாகை வட்டத் தலைவர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசி வருகிறார்

புதுச்சேரியில் மாயமான பெண் குழந்தை வாய்காலில் இறந்த நிலையில் கண்டெடுப்பு