in

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனின் பரிதாப நிலை


Watch – YouTube Click

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனின் பரிதாப நிலை

 

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய நிலையில் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காளவாசல் கலைஞர் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 50 )இவரது மனைவி லட்சுமி ( வயது48 )கதிர்வேல் அருகே உள்ள ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கதிர்வேல் லட்சுமி தம்பதிகளுக்கு கோகிலா செல்வபிரகாஷ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதில் கோகிலா திருமணமாகி மம்சாபுரம் பகுதியில் வசித்து வருகிறார் .
செல்வபிரகாஷ் கீழராஜகுலராமனில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்ற வரும் நிலையில் செல்வபிரகாஷ் பள்ளி சென்று வீடு திரும்பிய நிலையில் நீண்ட நேரமாக காணவில்லை என உறவினர்கள் தேடி உள்ளனர்.

செல்வபிரகாஷின் தாய் லட்சுமியும் தந்தை கதிர்வேலும் தனது மகளான கோகிலா வீட்டிற்கு சென்று பார்த்து விட்டு மற்றும் உறவினர்கள் வீடுகளில் செல்வபிரகாஷ்சை காணவில்லை என கூறியதை அடுத்து அவர்களும் விரைந்து வந்து பல்வேறு பகுதியில் தேடிய நிலையில் வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டுவதற்காக அமைக்கப்பட்ட செட்டில் சால்வையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் செல்வபிரகாஷ்சை கண்டுள்ளனர்.

உடனடியாக உடலை மீட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கீழராஜகுலராமன் போலீசார் அனுப்பி வைத்துவிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

பள்ளிக்குச் சென்று திரும்பிய சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட காரணம் என்ன பள்ளியில் ஆசிரியர்கள் திட்டினார்களா இல்ல சகமாணவர்கள் கேலி செய்தார்களா அல்லது பரிட்சைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மோடிக்கு கொலை மிரட்டல்

பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி