in ,

மோடிக்கு கொலை மிரட்டல்


Watch – YouTube Click

மோடிக்கு கொலை மிரட்டல்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடந்த மார்ச் மாதம் 8ஆம் தேதி சென்னையை அடுத்த பம்மலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், பிரதமர் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.

அமைச்சர் பேசுகையில், நாங்கள் எவ்வளவோ பிரதமரை பார்த்திருக்கிறோம். இந்த அளவுக்கு மட்டமான ஒரு பிரதமரை பார்த்ததியில்லை. திமுகவை யாராலும் அழிக்க முடியாது. அப்படி சொன்னவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள். நான் அமைச்சர் என்பதாக கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். இல்லையென்றால் பீஸ் பீஸ் ஆக்கி விடுவேன் என்ன பேசினார்.

இந்த பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் டெல்லி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்யா ரஞ்சன் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளர்.

அந்த புகாரின் அடிப்படையில் தா.மோ.அன்பரசன் மீது கலகம் தூண்டும் வகையில் பேசுவது, வெறுப்புத்தக்க பேச்சின் மூலம் வன்முறையை தூண்டுவது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு டிபன் பாக்ஸ் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவனின் பரிதாப நிலை