in

மாசி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை


Watch – YouTube Click

மாசி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

 

திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் ஆலயத்தில், மாசி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்குறையலூரில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற பஞ்ச நரசிம்ம ஆலயங்களில் ஒன்றான உக்கிர நரசிம்மர் ஆலயம் அமைந்துள்ளது.

வைணவ ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் அவதாரம் செய்த இந்த ஊரில் அமைந்துள்ள இந்த ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மர் அவதரித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மாசி மாத சுவாதி தினத்தை முன்னிட்டு உக்கிரநரசிம்மர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி நவக்கிரக ஹோமம் சுதர்சன ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்கள் ஆலய வெளிப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது தொடர்ந்து நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியப் பணிகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகாதீபாராதனை நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியவாறு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா தேரோட்டம்