in

ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானிக்கு கோவாவில் திருமண நடைபெற்றது

ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானிக்கு கோவாவில் திருமண நடைபெற்றது

 

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானியை நேற்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு நம்முடைய திருமண வாழ்த்துகளை தெரிவிப்போம் …நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்கி பாக்னானி நீண்ட நாட்களாக இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில், ரகுல் கடந்த 2021 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் தங்களது காதலை ரசிகர்களுக்கு உறுதிப்படுத்தினர்.

பிப்ரவரி 19ஆம் தேதி லிருந்து திருமண கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியது. இவர்கள் இருவரும் புதன்கிழமை அன்று கோவாவில் உள்ள ஐடிசி கிராண்ட் ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமண விழாவிற்கு ‘ஆனந்த் கராஜ்’ என்று பெயரிடப்பட்டது ரகுல் ஜாக்கி இருவருக்கும் இந்து மற்றும் சீக்கிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இவர்களின் இந்த திருமண விழாவிற்கு திரைப்பட நடிகர்கள், இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்தனர்.

குறிப்பாக ஷில்பா ஷெட்டி, ஈஷா தியோல், வருண் திவான் மற்றும் அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

தயாரிப்பாளரான ஜாக்கியின் சொத்து மதிப்பு மட்டும் ஏறத்தாழ 40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் தற்பொழுது படே மியான் சோட் மியா என்ற படத்தை அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷகப் ஆகியோரை வைத்து தயாரிக்கிறார்.

ரகுல் பிரீத்தி சிங் தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது மட்டுமல்ல எப்போதும் என் காதல் என்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இவர்களின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள் தற்பொழுது இளையதளத்தில் வைரலாகி வர, ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

What do you think?

வரும் 26 ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறப்பு

சிவகார்த்திகேயன் மற்றும் கமலஹாசனை குண்டர் சட்டத்தில் கைதி செய்ய வேண்டும்